மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் விபத்து.
எகொடஉயன, மோதர சுற்றுவட்டத்திற்கு அருகில் பாணந்துறை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வலதுபுறம் திரும்பவிருந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். எகொட உயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment