சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்.

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் இன்று (13) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில்,  சட்டவிரோத  தொழில் அதிகரிப்பு சிறுதொழில் மீனவர்கள் வாழ்வு பாதிப்பு, சட்டவிரோத தொழிலை தடைசெய், சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அனுர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே என பல கோசங்களுடன்  நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு வருகைதந்து போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர்.


தொடர்ந்து போராட்டம் நடாத்தியவர்களுக்கும் ஊடகங்களுக்கும் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 20 வீதமானவர்கள் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளதாகவும், சுமார் 71 km க்கும் அதிகமாக கடல் உள்ளதாகவும் தெரிவித்தார். 
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மீன் வளம் சட்டவிரோத முறையில் அழிக்கப்படுவதாகவும், தற்போதய அரசாங்கத்தின் கொள்கையாக இயன்றவரை சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதாகும் என தெரிவித்துடன், எமது மாவட்டத்தில் மீன்பிடி துறை பிரச்சனையிலும் பார்க்க அதிகமாக இருந்த போதைப்பொருள் பிரச்சனை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போராட்டகாரர்களின் கோரிக்கையினை தாம் அரசாங்கத்திற்கு அனுப்புவதாகவும் அரசாங்கத்தின் முடிவுகள் மீனவர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
















Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.